Monday 30 April 2012

ஆன்மிக சிந்தனைகள் »பைபிள்


சபிப்பவரையும் வாழ்த்துங்கள்

* சுமைகளைத் தாங்க முடியாமல் வருந்துபவர்களெல்லாம் என்னருகில் வாருங்கள், நான் உங்களைத் தேற்றுவேன்.
* பகைவரிடம் அன்பு காட்டுங்கள். உங்களை சபிப்பவரையும் வாழ்த்துங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கும் நன்மை செய்யுங்கள். அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
* அறிவாளியின் இருதயம் அவனது வலது கைப்புறம் இருக்கிறது. முட்டாளின் இருதயமோ அவனது இடது கையில் இருக்கிறது.
* கொழுத்த எருதுக் கறியைப் பகையோடு உண்பதைவிட, அன்பு இருக்குமிடத்தில் வெறும் இலைக்கறியை உண்பது நல்லது.
* நண்பன் எந்தக் காலத்திலும் நேசிப்பான். ஆபத்துக் காலங்களில் உதவவே சகோதரன் பிறந்தான்.
* தன்னைத்தானே உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுகிறான். தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனே உயர்த்தப்படுகிறான்.
* உண்மையில் அறுவடை செய்ய வேண்டியதோ ஏராளமாயிருக்கிறது, ஆனால், வேலையாட்களோ வெகு சிலர் தான் இருக்கிறார்கள்.
பைபிள் பொன்மொழிகள் 

பொறுமையுடன் காத்திருங்கள்

* அடிமையேயாயினும், உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து நன்மையே பெறுவர்.
* பயிரிடுபவரைப் பாருங்கள், அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியும் வரை பொறுமையோடு காத்திருக்கிறார்.
* கடவுளின் செயலுக்காக நான் மவுனமாகக் காத்திருக்கிறேன்; எனக்கு மீட்பு கிடைப்பது அவரிடமிருந்தே.
* வாழ்வு அளிக்கும் நீருற்றுகளுக்கு வழி நடத்திச் செல்லும் கடவுள், அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.
* சிற்றலைகளும், பேரலைகளும் என் மீது புரண்டோடுகின்றன. நாள்தோறும் கடவுள் தம் பேரன்பைப் பொழிகின்றார்.
* நாங்கள் கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால், பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது.
* தேவையில் உழல்வோருக்குப் பகிர்ந்து கொடுக்க, தங்களிடம் பொருள் இருக்கும் வகையில் நேர்மையோடு பாடுபட்டு உழைக்கட்டும்.
பைபிள் பொன்மொழிகள் 

எல்லாருக்கும் நன்மை செய்யுங்க!

* அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலை வாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.
* இறைவனுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, இறைவனின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.
* நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே! சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர், எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். 
* வைகறையில் விழித்தெழுந்து நள்ளிரவில் ஓய்வெடுக்கும் வரை மானிடர் தம் உணவுக்காக வருந்தி உழைப்பது வீணே. 
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய். நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல் புரிவதுமில்லை, சிந்தனை செய்வதுமில்லை.
* உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி, எல்லாருக்கும், எப்பொழுதும், நன்மை செய்யவே நாடுங்கள்.
* நம்பிக்கை இல்லாத தீய உள்ளம், கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய உள்ளம் உங்கள் எவருக்கும் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். 
பைபிள் பொன்மொழிகள்

எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை!

* ஒருவன் தேவ பக்தியுள்ளவனாய் இருந்து, அவருக்கு சித்தமானதைச் செய்தால் தேவன் அவனுக்கு செவி கொடுப்பார்.
* அறிவாளியின் வாயில் உள்ள வார்த்தைகள் கருணையானவை. ஆனால், முட்டாள்களின் உதடுகளோ அவனையே விழுங்கிவிடும். 
* தர்ம குணமுடையவன் மிருகத்தின் உயிரையும் தன் உயிராகக் கருதுவான். ஆனால், தீயவர்களின் மிருதுவான தயவு கூட கொடூரமாக தோன்றும். 
* நீங்கள் எந்த அளவு அளவினால் அளப்பீர்களோ, அதே அளவு உங்களுக்கு திரும்ப அளிக்கப்படுவது மட்டுமின்றி, கூடுதலாகவும் கொடுக்கப்படும்.
* எந்த மனிதனாவது தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பான் என்றால், அவனுக்கு எதுவுமே தெரியாது என பொருள்.
* உங்கள் தலைமீது கைவைத்து சத்தியம் செய்ய வேண்டாம். ஏனெனில், உங்களால் அதிலிருக்கும் ஒரு ரோமத்தைக்கூட வெள்ளையாகவோ, கறுப்பாகவோ மாற்ற முடியாது.
* ஜெபம் செய்யும் போது கடவுளிடம் எவற்றைக் கேட்டு கொள்வீர்களோ, அவற்றைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள்.
பைபிள் பொன்மொழிகள் 

ஓடினாலும் களைப்பு வராது

* சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியதாகும்.
* மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானமிக்கது. மனித வலிமையை விட, அவருடைய வலுவின்மை வலிமைமிக்கது.
* கடவுள் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் புதிய ஆற்றலை பெறுவர். அவர்கள் ஓடுவர், களைப்படையார், நடந்து செல்வர், சோர்வடையார்.
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்.
* உங்களுக்குள் ஒருவருக்கொருவர் மட்டுமின்றி அனைவருக்கும், எப்போதும் நன்மை செய்யவே விரும்புங்கள்.
* ஒரே எண்ணமும், ஒரே அன்பும், ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்.
* கடவுளிடம் அன்பு செலுத்துவோர், தம் சகோதர சகோதரிகளிடமும் அன்பு செலுத்தட்டும்.
* அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைத்த வாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.
பைபிள் பொன்மொழிகள் 

நன்றி சொல்வோம் இறைவனுக்கு!

* கடவுள் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கிறார். கடவுள் அருளையும் மேன்மையையும் அளிப்பார்.
* கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர், என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
* மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.
* அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும், அனைத்தையும் நம்பும், அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும், அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.
* கடவுளே! என் இளமை முதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்.
* ஒருவர் தம்மைத் தூய்மையாக வைத்துக் கொண்டால், அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார்.
* மனத்தளர்ச்சியுள்ளவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள்; வலுவற்றோருக்கு உதவுங்கள்; அனைவரிடமும் பொறுமையாயிருங்கள்.
* நம்பிக்கை இல்லாத தீய உள்ளம் உங்கள் எவருக்கும் வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
- பைபிள் பொன்மொழிகள்

நானே உலகின் ஒளி

* ஜீவ அப்பம் நானே. என்னிடத்தில் வருகிறவன் ஒருகாலமும் பசியடையான். விசுவாசமாயிருக்கிறவன் ஒருகாலமும் தாகமடையான்.
* இருக்கிறவரும், இருந்தவரும், மீண்டும் வருகிறவருமாகிய சர்வ வல்லவராகிய நான், ஆதியும், அந்தமும், முந்தினவரும், பிந்தினவருமாயிருக்கிறேன்.
* இரண்டு பேர் மூன்று பேர் என் பெயரால் எங்கே கூடி இருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் நான் இருக்கிறேன். நான் உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன். 
* நானே, வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னைக் கண்டவன் கடவுளை கண்டவன். நானும் கடவுளும் ஒன்றாக இருக்கிறோம். 
* நான் உலகின் ஒளியாயிருக்கிறேன். நான் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். 
* வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதலையும், சமாதானத்தையும் தருவேன். 
இயேசுநாதர்
இன்று கிறிஸ்துமஸ் 

நேர்மைக்கு துன்பம் இல்லை

* அழுகிறவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்.
* மனிதனின் மனதிலிருந்து வெளிவருபவைகளே அவனை அசுத்தப்படுத்துகின்றன. அவன் தெய்வ நிந்தனை, அகங்காரம், மூடத்தனம் ஆகியவற்றின் கூட்டமைப்பாக இருக்கிறான்.
* அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு அழிந்து நாசமாகிவிடும். நேர்மையானவர்களோ எப்பேர்பட்ட துன்பத்திலிருந்தும் விடுவிக்கப்படுவர்.
* நாக்கு ஒரு சிறிய அங்கமாக இருந்தாலும் சிறிய விஷயங்களைக் கூட பிரமாதப்படுத்தி விடும். நாக்கிலிருந்து வரும் சொற்களே ஒருவனின் வாழ்வை நிர்ணயம் செய்யும்.
* பலசாலியை விட கோபம் கொள்வதில் மிதமாய் இருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனைவிட தன் உணர்ச்சியை அடக்கி ஆள்பவனே சிறந்தவன்.
* அடக்கு முறையில் நம்பிக்கை வேண்டாம்.உன்னிடம் பணம் பெருகுமானால் அதன் மீது உனது இதயத்தை வைக்காதே.
-பைபிள் பொன்மொழிகள் 


மனசுத்தம் உள்ளவரின் நண்பன்

* ஒடுக்கி அடக்கப்பட்டவர்களுக்கு கடவுளே அடைக்கலமானவர். கஷ்ட காலத்திலும் அவரே நமக்கு உதவுகிறார்.
* கடவுள் நமக்கு பயம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. சக்தியும், அன்பும், மன அமைதியும் உள்ள ஜீவனைத் தான் கொடுத்திருக்கிறார்.
* மனசுத்தமாக இருக்கும் ஒருவனுக்கு அந்த நாட்டை ஆள்பவன் கூட நண்பனாகத் தான் இருப்பான். அவனுடைய உதட்டு அசைவை அனைவருமே விரும்புவர்.
* அவர் (கர்த்தர்) தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்.
* நீ ஒருவனிடம் எதையாவது அநியாயமாக வாங்கினால் நான்கு மடங்காக திரும்ப செலுத்த வேண்டி வரும்.
* பெற்றோர்களே! பாவச் செயல்களுக்கு உங்கள் குழந்தைகளை உட்படுத்த வேண்டாம், உட்படுத்தினால் ஒரு நாள் நாமும் கதற நேரிடும்.
* பலசாலியைவிட கோபம் கொள்வதில் மிதமாய் இருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களை கைப்பற்றுபவனைவிட தன் உணர்ச்சியை அடக்கி ஆள்பவனே சிறந்தவன்.
-பைபிள் பொன்மொழிகள் 

விழித்திருந்தால் வெற்றி பெறுவாய்

* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும் போது செய்.
* உன் கடவுளாகிய ஆண்டவர், உன் நிலத்தின் விளைச்சல்களுக்கும், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார்.
* உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.
* கடவுளுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, கடவுளின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.
* தூங்கி கொண்டேயிருப்பதை நாடாதே, கண் விழித்திரு. உனக்கு வயிறாற உணவு கிடைக்கும்.
* வேலை செய்வதாகக் காட்டிக் கொள்ளாமல், கடவுளின் பணியாளராய், கடவுளின் திருவுள்ளத்தை (அவரது விருப்பத்தை) உளமாற நிறைவேற்றுங்கள்.
* ஒருவர் தம்மை தூய்மையாக வைத்துக் கொண்டால், அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாக இருப்பார்.
- பைபிள் பொன்மொழிகள் 

No comments:

Post a Comment