Thursday 26 April 2012

விடுகதைகள்


1) ஒட்டுத் திண்ணையில் தடுக்குப் போட்டேன், திருப்பி
எடுக்கத்தான் முடியவில்லை – அது என்ன?
-
2) ஒரு கரண்டி மாவே ஊருக்கெல்லாம் தோசை – அது என்ன?
-
3) ஒரு கால், நான்கு கீத்து, ஒரு பந்தல் – இது என்ன?
-
4) ஒரு குளத்தில் ஒரு தட்டு, நனையாமல்கிடக்கிது,
மூழ்கவும் இல்லை – இது என்ன?
-
5) ஒரு சாண் கட்டைக்கு அரைச்சாண் மூடி – அது என்ன?
-
====================
விடைகள்:
1. கோலம்
2. நிலா
3. அரைக் கீரை
4. தாமரை இலை
5. பேனா


-
1) ஒருவரை ஒருவர் இவர்கள் அடித்துக் கொள்வார்கள்,
ஆனாலும் தகராறே கிடையாது, அவ்வளவு
நெருங்கியவர்கள் – இவர்கள் யார்?
-
2) ஒருவரை ஒருவர் துரத்திப் பிடிப்பதில் இவர்களுக்குள்
பெரிய போட்டி, காலக் கணக்கைக் காட்டுவதில்
இவர்கள் மிக வல்லவர்கள் – யார் இவர்கள்?
-
3) ஒரு சிறிய குளம், அதைச் சுற்றிலும் அழகான ஐந்து
வீடுகள் – இது என்ன?
-
4) ஒன்பது பிள்ளைகளுக்கும் ஒரே குடுமிதான் ! – இது என்ன?
-
5) ஒரு பெண்ணுக்கு மூன்று கொண்டைகள், ஒன்று
குறைந்தாலும் அவளுக்கு துன்பம்தான் – இது என்ன?
-
============================================
விடைகள்:
1) கண் இமைகள்
2) கடிகாரத்தின் முட்கள்
3) உள்ளங்கை, ஐந்து விரல்கள்
4) வெள்ளைப் பூண்டு
5) அடுப்பு

1) காற்றால் உயிர் பெறும், காதுக்கு இனிமை தரும்
- அது என்ன?
-
2) ஊரில்லா மாநிலங்கள், தண்ணீர் இல்லா கடல்கள்
-அது என்ன?
-
3) பகலில் உறங்குவான், இரவில் அலறுவான்
-அவன் யார்?
-
4) நடைக்கு உவமை ஆனாள், நளனுக்கு தூது போனாள்
- அவள்யார்?
-
5) பிச்சு பிச்சு எறிந்தாலும் பின்னாலேயே முளைக்கிறான்,
வெட்டி வெட்டி எறிந்தாலும் எட்டு நாளில் முளைக்கிறான்
-அவன் யார்?
-
=====================
===============================
விடைகள்:-
1) புல்லாங்குழல்
2) தேச வரைபடம்
3) ஆந்தை
4) அன்னம்
5) நகம்

1) மாலையிலே சாலையிலே மலரும் பூ, காலையில்
வெளிச்சம் வந்தால் கண் மூடும் பூ – அது என்ன பூ?
-
2) நாலு குழித்தட்டு இட்லித்தட்டுமல்ல,
நல்ல இரும்புத் தட்டு பணீயாரச் சட்டியுமில்லை
போரிலே வீரனைக் காக்கும் கவசமுமல்ல -அது என்ன?
-
3) சீமையிலே செஞ்ச சின்னதுரை, சின்ன மாளிகைக்ககு
நல்ல காவல்காரனாம் – அவன் யார்?
-
4)  செய்ததைச் செய்யும் குரங்கும் அல்ல
சிங்காரிக்க உதவும் சீப்புமல்ல – அது என்ன?
-
5) வயிறு நிறையச் சாப்பிட்டால், வானத்தில் பறப்பான்
- அவன் யார்?
-
6) பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து ,வாயில்
இட்டால் தேன்பந்து – அது என்ன?
===================================================
விடைகள்:
1) தெரு விளக்கு
2) கேடயம்
3) பூட்டு
4) கண்ணாடி
5) பலூன்
6) லட்டு
—————

1) தொப்பை பையனுக்கு ஒரு வாசல், தோழனுக்கு
இரு வாசல் – அவன் யார்?
-
2) மரத்துக்கு மரம் தாவும் குரங்கல்ல, பட்டை
போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?
-
3) ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி
வரும் பந்தும் அல்ல – அது என்ன?
-
4) உழைப்பில் மலரும் பூ, உடனடி உலரும் பூ – அது என்ன?
-
5) காற்றுப் புகாத வெள்ளைக் கூண்டில் மஞ்சள் புறா
மயங்கிக் கிடக்குது – அது என்ன?
-
=========================================
விடைகள்:
!) சட்டை
2) அணில்
3) கடல்
4) வியர்வை
5) முட்டை

1) கடித்தால் துவர்ப்பு, தண்ணீர் குடித்தால் இனிப்பு -
அது என்ன?
-
2) கனத்த பெட்டி, கதவைத் திறந்தால் மூட முடியாது -
அது என்ன?
-
3) கொடுக்க முடியும், எடுக்க முடியாது – அது என்ன?
-
4) முல்லைத் தோட்டத்தில் கறுப்பு முத்து – அது என்ன?
-
5) எலும்பில்லாத மனிதன், கிளையில்லாத மரத்தில்
ஏறுவான் – அது என்ன?
-
=====================================
விடைகள்:
1) நெல்லக்கனி
2) தேங்காய்
3 )கல்வி
4) கண்
5) பேன்

1) பறிக்க பறிக்கப் பெரிதாகிறது – அது என்ன?
-
2) உமி போல் பூ பூக்கும், சிமிழ் போல் காய் 
காக்கும் – அது என்ன?
-
3) பச்சைப்புல்லில்  துவண்டு வரும், பவளம் போல்
உருண்டு வரும் – அது என்ன?
-
4) பால் இல்லாமலே பருக்கிறது, நோய் இல்லாமல்
இளைக்கிறது, அது என்ன?
-
5) நாக்கு இல்லாதவன் நல்லது சொல்வான்- அது என்ன?
-
===========================================
விடைகள்:
1) குழி
2) நெல்லிக்காய்
3) பனித்துளி
4) சந்திரன்
5) புத்தகம்

1) தண்ணீரிலே துள்ளாட்டம், தரையிலே தள்ளாட்டம் -
அது என்ன?
-
2) அந்தரத்தில் பறக்கும் பறவையல்ல
அந்திக்குப் பின் இரைதேடும் ஆந்தையல்ல
தலைகீழாய் நின்றிருக்கும் தவசியுமல்ல
-
அது என்ன?
-
3) செவி இல்லாத செவிடன் செகம் பூராவும் திரிகிறான்.
கால் இல்லாத கபடன் காடும் மேடும் போகிறான் -
அவன் யார்?
-
4) கொண்டையிலே பூ உண்டு, எடுக்க நாதியில்லை
குதிகாலில் முள் உண்டு, பிடுங்க நாதியில்லை – அது என்ன?
-
5) எட்டு கால் ஊன்றி, இரு கால் படமெடுத்து வட்டக்குடை
பிடித்து வருகின்ற அழகினைப் பார் – அது என்ன?
-
6) இருப்பது இரண்டு கால் , ஓடுவது குதிரை வேகம்,
இறக்கை உண்டு பறக்காது – அது என்ன?
-
===========================================

விடைகள்:-
1) மீன்2) வௌவால்
3) பாம்பு
4) சேவல்
5.)நண்டு
6).நெருப்புக் கோழி

1)அழுக்கு மூட்டை சுமக்கும், அலங்கார நடை நடக்கும்
சந்தோஷம் மீறி வந்தால், சங்கீதம் உறக்கப் பாடும் – அது என்ன?
-
2)பதுங்கிப் பதுங்கி வருவார், பாய்ந்து எதையும் பிடிப்பார்
வீட்டுக்குள்ளே திரிவார் – அவர் யார்?
-
3) போவான் போய்க்கொண்டே இருப்பான். போகும்
இடங்கள் எல்லாம் கோடிட்டே போவான் – அவன் யார்?
-
-
4) வாய்வழியாய் நூல் எடுப்பான் வித்தைக் காரனல்ல
வலையிலிருந்து உயிர் குடிப்பான் எமனல்ல, அது யார்?
-
5) தண்ணீரில்லாத பொட்டலிலே தாவிச் செல்லும் கப்பல் எது?
-
6) பழகினால் விடமாட்டான், பாசத்திலே நிறைந்திருப்பான்
அவன் யார்?
-

===============================================
விடைகள்:
1) கழுதை
2) பூனை
3) நத்தை
4) சிலந்தி
5) ஒட்டகம்
6) நாய்

ஓரெழுத்துச் சொற்கள் – கண்டு பிடியுங்கள்

-
2) இது மணக்கும்
-
3) இது விரட்டும்
-
4) இது அழைக்கும்
-
5) இது ஒரு மாதம்
-
6) இது கேட்கும்
-
7) இது சுடும்
-
8) இது சுட்டும்
-
9) இது பசு
-
10) இவன் அரசன்
-
11) இது ஓர் உறுப்பு
-
12) இது சோலை
-
13) இது எழுத உதவும்
-
14) இது பழம் தரும் மரம்
-
15) இதில் பொருளை வைக்கலாம்)
===============================

விடைகள்:
(கலைந்துள்ளன), எண்ணுக்கு நேரே சரியான விடையை எழுதுங்கள்

=======================================================
-
பை, ஆ, பூ, கா . போ,கோ, வா, தை, கை, தா, மை, தீ, மா, நீ, ஈ






No comments:

Post a Comment