Monday 30 April 2012

ஆன்மிக சிந்தனைகள் »பைபிள்


ஆனந்தம் அடையும் வழி

* அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் தெய்வமக்கள் என்று அழைக்கப் பெறுவார்கள்.
* என் வார்த்தைக்குச் செவி சாய்ப்பவன் எவனோ, அவன் பத்திரமாய் வாழ்வான். தீமையைப் பற்றிய பயமின்றி அமைதியாக இருப்பான்.
* அயலவனை மதிப்பவன் பாவம் செய்கிறான். ஆனால், எளியவனுக்கு இரங்குபவனோ ஆனந்தமாயிருப்பான்.
* ஒர் ராஜ்யம் தனக்குத் தானே விரோதமாகப் பிளவுபடுமேயானால் அந்த ராஜ்யம் நிலைநிற்க மாட்டாது.
* வேட்டையில் எடுத்து வந்ததைச் சோம்பேறி சமைப்பது இல்லை. சுறுசுறுப்பே மனிதனின் அரும்பொருள்.
* பெண்கள் மிதமான ஆடை அணியட்டும். நாணம் மிகுந்த முகத்துடனும், புலனடக்கத்துடனும் இருக்கட்டும். 
* வானமும் பூமியும் ஒழிந்து போகும். ஆனால், என் வார்த்தைகளோ அழியவே அழியாது.
* அழிவுள்ளதாய் விதைக்கப்படுவது அழிவில்லாததாக எழுந்திருக்கும்.
பைபிள் பொன்மொழிகள்

பணத்தில் பற்று வேண்டாம்

* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனை கொடுக்கவில்லை. சக்தியும் அன்பும் மனஅமைதியும் உள்ள ஜீவனைத் தான் கொடுத்திருக்கிறார்.
* பலசாலியை விடக் கோபம் கொள்வதில் மிதமாயிருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விடத் தன் உணர்ச்சியை அடக்கியாள்பவனே சிறந்தவன்.
* கடவுளே எனக்குத் துணை. மனிதன் எனக்கு என்ன செய்வானென்று அஞ்சமாட்டேன் என்று நான் தைரியமாகச் சொல்லலாமே.
* ஒடுக்கி அமுக்கப்பட்டவர்களுக்கு கடவுளே அடைக்கலமானவர். சங்கடவேளையிலும் அவரே அடைக்கலமானவர்.
* அடக்குமுறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டாம். கொள்ளைத்தனத்தில் வீணாகிவிட வேண்டாம். செல்வத்தின் மீது உங்கள் இருதயத்தை வைத்துவிட வேண்டாம்.
* நீ பரிபக்குவமான மனிதனையும், நேர்மையாளனையும் கவனித்துப்பார். அவனுடைய முடிவு அமைதியானதாயிருக்கும்.
* மனதில் பற்றற்றவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் மோட்ச சாம்ராஜ்யம் அவர்களுடையது.
பைபிள் பொன்மொழிகள்

நாக்கின் மீது கவனம் வை!

* அகத்தூய்மை உடையோர்க்கு எல்லாமே தூய்மை. கெட்டழிந்தவர்களுக்கும், நம்பாதவர்களுக்குமோ எதுவுமே தூய்மை இல்லை. அவர்களுடைய அறிவும் மனசாட்சியும் கறை படிந்திருக்கிறது.
* அகத்தூய்மையை விரும்புபவனை அவனுடைய உதடுகளின் நளினத்திற்காக அரசனும் அவனுடைய தோழன் ஆவான்.
* அக்கிரமக்காரர்கள் எதிர்பார்ப்பது அழிந்தே போகும். நேர்மையானவனோ கஷ்டத்தில் இருந்து விடுவிக்கப்படுவான்.
* என் அகத்தைச் சுத்தமாக்கினேன். என் தீவினையில் இருந்து தூய்மையானேன் என்று எவன் தான் சொல்ல முடியும்?
* நாக்கு ஒரு சிறிய அங்கமாய் இருந்தாலும் எவ்வளவு பெரிய விஷயங்களையும் பிரமாதப்படுத்தும். ஒரு சிறு நெருப்புப் பொறியோ பெரிதாகக் கிளறி விடுவதைப் பார்.
* தன்னிலே அசுத்தம் என்று எதுவுமில்லை. ஆனால், எதையும் அசுத்தம் என்று மதிப்பவனுக்குத் தான் அது அசுத்தமாய் இருக்கிறது.
பைபிள் பொன்மொழிகள்

குழந்தைகளுக்கு நல்வழி

* அசட்டுத்தனமான வீண் கேள்விகளைத் தவிர்த்துவிடு. அவை சச்சரவுகளையே பிறப்பிக்கின்றன.
* சாந்த குணமுள்ளவர்களைக் கடவுள் நியாயத்திலே நடத்தி, சாந்த குணமுள்ளவர்களுக்குத் தம் வழியைக் கற்பிக்கிறார்.
* கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும்; நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.
* வீடும், செல்வங்களும் தந்தையரின் வாரிசுச் சொத்து. புத்தியுள்ள மனைவியோ கடவுளிடமிருந்து கிடைப்பது.
* நடக்க வேண்டிய வழியில் குழந்தையைப் பழக்கினால், வயதான பிறகு அந்த வழியிலிருந்து விலகாமலிருப்பான்.
* செயல்களில் தவறு செய்கிறோம். ஆனால், வார்த்தையில் தவறு செய்யாதவனே பரிபூர்ணமான மனிதனாவான்.
* முகத்தோற்றத்தைக் கொண்டு முடிவு செய்யாதே. நேர்மையான நியாயத்தைப் பார்த்துத் தீர்ப்புச் சொல்.
* அழைக்கப்பட்டவர்கள் பலர். ஆனால், தேர்ந்தெடுக்க பட்டவர்களோ சிலர் மட்டுமே.
-பைபிள் பொன்மொழிகள் 

நம்பிக்கை வையுங்கள்

* கடவுளாகிய ஆண்டவர், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார்.
* கடவுளே உங்களுக்குள் செயலாற்றுகிறார். அவரே தமது திருவுளப்படி நீங்கள் செயற்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.
* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்; அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்துவிட வேண்டும்.
* நன்மை செய்வதில் ஞானம் உடையவர்களாகவும், தீமை என்றால் என்ன என்றே தெரியாத கபடமற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
* கடவுள் மீது நம்பிக்கை வைப்பவர்கள் புதிய ஆற்றல் பெறுவர். 
* பசும் புல்வெளி மீது என்னை அவர் இளைப்பாறச் செய்வார். அமைதியான நீர் நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்வார்.
* அமைதிக்கு வழி வகுப்பவற்றை நாடுவோமாக! ஒருவர் மற்றொருவருக்கு வளர்ச்சி தருபவற்றைச் செய்ய முயலுவோமாக!
-பைபிள் பொன்மொழிகள்

கடவுளிடம் நம்பிக்கை கொள்

* நேர்மையாளனுக்கு வெளிச்சமும், செம்மையாக நிமிர்ந்த நெஞ்சினருக்காக உற்சாகமும் விதைக்கப்பட்டிருக்கின்றன.
* வாழ்க்கையில் மனிதனிடம் அந்தரங்க நம்பிக்கை வைப்பதைவிடக் கடவுளிடம் நம்பிக்கை வைத்திருப்பதே நல்லது.
* துன்பம் பொறுமையையும், பொறுமை அனுபவத்தையும், அனுபவம் நம்பிக்கையையும் உண்டாக்குகிறது.
* இப்பொழுது நிலைபெற்றிருப்பவை: விசுவாசம், நம்பிக்கை, தர்மம். இம்மூன்றினுள் மகத்தானது தர்மமே ஆகும்.
* அடங்காதவர்களை எச்சரியுங்கள். பலவீன மனம் படைத்தவர்களைத் தேற்றுங்கள். எளியவர்களை ஆதரியுங்கள். அனைத்து மனிதர்களிடமும் பொறுமையாய் இருங்கள்.
* ஜெபம் செய்யும் போது வேடதாரிகள் போல் விளங்க வேண்டாம். பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜெப ஆலயங்களிலும், முச்சந்தியிலும் நின்று ஜெபம் செய்ய விரும்புகிறார்கள்.
-பைபிள் பொன்மொழிகள்

குழந்தைகளுக்கு

* வீடும் செல்வங்களும் தந்தையரின் வாரிசு சொத்து. புத்தியுள்ள மனைவியோ ஆண்டவரிடமிருந்து கிடைப்பது.
* சாந்த குணமுள்ளவர்களை கடவுள் நியாயத்திலே நடத்தி சாந்த குணமுள்ளவர்களுக்குத் தம் வழியைக் கற்பிக்கிறார்.
* நான் சத்தியத்திற்குச் சாட்சியாகவே பிறந்தேன்; அதற்காகவே இந்த உலகிற்கு வந்தேன். சத்தியத்தைக் கடைபிடிப்பவன் எவனும் என் குரலுக்குக் காது கொடுக்கிறான்.
* நடக்க வேண்டிய வழியில் குழந்தையைப் பழக்கினால், வயதான பிறகும் அந்த வழியிலிருந்து விலகாமலிருப்பான்.
* ஒவ்வொருவனும் பேசுவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருப்பானாக.
* அறிவுள்ளவனைக் கண்டித்தாலும் அவன் உன்னை நேசிப்பான்.
* உன்னுடைய கண் உன் உடலின் தீபமாயிருக்கிறது. உன் உடல் முழுதும் இருள் உள்ளதாயிருக்கும். ஆதலின் உன்னுள்ளே இருக்கும் ஒளியே இருளாயிருந்தால் இருட்டு எவ்வளவு பெரியதாயிருக்கும்.
பைபிள் பொன்மொழிகள்

ஜெபம் கேட்கப்படவில்லையா

* இயேசுகிறிஸ்து கெத்சமனே தோட்டத்தில் முகங்குப்புற விழுந்து பிதாவை நோக்கி ஜெபித்தார். மனுக்குலத்தின் இரட்சிப்பின் திட்டத்தை தம்முடைய மரணத்தினாலே நிறைவேற்ற வந்தவர்,""இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்,'' என்று ஜெபித்தார். அந்த ஜெபம் கேட்கப்படவில்லை. ஆகவே, ""உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது,'' என்று தம்மை ஒப்புவித்தார்.
* ஆனாலும், இரண்டாம் முறையும் அப்படியே ஜெபித்தார். அப்போதும் கேட்கப்படவில்லை. மீண்டும் பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். மூன்றாம் தரமும் அப்படியே ஜெபித்தார். பதிலில்லை. முற்றுமாக, பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். 
* அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான். இரட்சிப்பின் 
திட்டத்தை செய்து முடித்தார்.
* ""நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்கு செவிமடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்'' (யோவா 5:14) என்கிறது பைபிள். 
தேவனுடைய வார்த்தை இதழிலிருந்து

கேட்பவர்க்கு உதவுங்கள்

* ஆலோசனையாளர்கள் பலர் இருந்தால், அவர்களின் மத்தியில் தான் பாதுகாப்பு இருக்கிறது.
* சுமையைத் தாங்க முடியாமல் வருந்துபவர்களெல்லாம் என்னருகில் வாருங்கள். நான் (இயேசு) உங்களைத் தேற்றுவேன்.
* நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒரு மாதிரி தான். ஆயினும் ஒவ்வொருவனும் தன் உழைப்புக்கேற்ற ஊதியத்தையே பெறுவான்.
* உன்னிடத்தில் வந்து கேட்பவனுக்குக் கொடு, உன்னிடம் கடன் கேட்க விரும்புகிறவனுக்கு முகத்தை திருப்பாதே.
* அன்பையும் நற்செயல்களையும் தூண்டும்படியாக நாம் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்வோமாக.
* புரிந்து கொள்பவனுக்கு, ஞானம் அவன் எதிரேயே இருக்கிறது. முட்டாளின் கண்களோ உலகின் கடைசிக் கோடி வரை தேடியலையும்.
* பிறப்பதற்கு ஒரு காலமும், இறப்பதற்கு ஒரு காலமும், விதைப்பதற்கு ஒரு காலமும், விதைத்தலின் விளைச்சலைப் பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு.
பைபிள் பொன்மொழிகள்

விழித்திரு.. உணவு கிடைக்கும்

* நடுகிறவனும் நீர்பாய்ச்சுகிறவனும் ஒரு மாதிரி தான். ஆயினும், ஒவ்வொருவனும் தன் உழைப்புக்கேற்ற ஊதியத்தையே பெறுவான்.
* தேவையுள்ளவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை. எளியவர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குமே நசித்துப் போய்விடுவதில்லை.
* இரவோ முன்பே கழிந்து போயிற்று. பகலோ மிகவும் நெருங்கிவிட்டது. ஆகையால், இரவின் செயல்களை உதறிவிட்டு, ஒளியின் கவசங்களை அணிந்து கொள்வோம்.
* உறக்கத்தை விரும்பாதே, விரும்பினால் வறுமை அடைவாய், கண் விழித்திரு; திருப்தியான அளவு உணவு பெறுவாய்.
* கடவுளே நமக்கு அடைக்கலமும் பலமும் ஆனவர். துன்பங்களிடையே உற்ற துணையும் ஆனவர்.
* எந்தக் காலத்திலும் எவரும் கடவுளைக் கண்டதில்லை. நாம் ஒருவரையொருவர் நேசித்தால் நம்முன் கடவுள் வசிக்கிறார்.
* உன்னிடத்தில் வந்து கேட்பவனுக்குக் கொடு. உன்னிடம் கடன் கேட்க விரும்புகிறவனுக்கு முகத்தைத் திருப்பாதே.
- பைபிள் பொன்மொழிகள் 


No comments:

Post a Comment