Wednesday 20 June 2012

உடல் உறுப்பு தானம் எப்படி செய்வது ?




``உடல் உறுப்பு தானம்'' " தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''


``உடல் உறுப்பு தானம்'' என்பதுதன் உடலிலுள்ள உறுப்பையோஅல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோமரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்குதாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.
நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார்பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.

"பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம்கண்தானம் இந்த இரண்டு வித தானங்கம் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?''

"
உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவதுஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவதுஒருவர் இறந்த பின்னர் தருவது.

"
உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?''

"
ஒரு சிறுநீரகம்ஈரலின் ஒரு பகுதிநுரையீரலின் ஒரு பகுதிகுடலின் ஒரு பகுதி,கணையத்தின் ஒரு பகுதிரத்தம் ஆகியவை.''

"
இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''
                      
"இரண்டு சிறுநீரகங்கள்கணையம்கல்லீரல்நுரையீரல்குடல் முழுவதும்கண் விழித்திரை (கார்னியா).''

"
யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?''

"
நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள்ரத்தக்கொதிப்புசர்க்கரை நோய்புற்று நோய்இதய நோய்பால்வினை நோய்ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.''

"
உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?''
"18 
வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள்அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.''

"
உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?''

"
ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன.'' 1954 ஆம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-

  1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள்சகோதரன்சகோதரிபெற்றோர், 18வயதிற்கு மேற்பட்ட மகன்மகள்மாமாஅத்தைசித்தப்பாஅவர்களுடைய மகன்மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.

    2. 
    ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள்மனைவி,மாமனார்மாமியார்கூட வேலை செய்பவர்கள்பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.

    3. 
    சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம்அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல்மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.

    "
    தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்திநன்றாக வேலை செய்யுமா?'

"பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டுதன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல்நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தான் காரணம்.
ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் ``ப்ளாஸ்மா பெரிஸிஸ்'' என்ற முறையில்ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறுமாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது,கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.''

"
உயிருடன் இருக்கும் பொழுதுஉடல் உறுப்பு தானம் செய்வதால்தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?''

"
பொதுவாகதானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள்ஒன்றை தானமாக தரும் போதுஇரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால்அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும்,
ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர்தன் வேலையைதானாகவே செய்து கொம்ளலாம்பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின்தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும்.

நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால்மீதமுள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை.
ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும்.
ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள்மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாதுஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாதுஎந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாதுமது அருந்தி இருக்கக்கூடாதுஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது,
உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாதுகுறைந்தது மூன்று மாதங்களுக்கும் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.''

"
வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?''

"
கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்புஎலும்பின் மஜ்ஜை (போன் மாரோ),ரத்த நாளங்கள்தோல்இதயம்இதயத்திலுள்ள வால்வுகள்கணையம்கல்லீரல்,நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம்.
ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும்திசுக்களையும்,தானமாக பெற முடியும். ஒரு மனிதன்பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.

ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்)அல்லது மூளை செயல் இழந்து போய்இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்)அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்றுஅவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும்திசுக்களையும்,எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.
எலும்புகளும்திசுக்களும்எந்தவித மரணமாக இருந்தாலும்எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம்.
ஆனால் உடல் உறுப்புக்களானஇதயம்கல்லீரல்நுரையீரல் போன்றவை,மூளைச்சாவுஅதாவது மூளை செயல் இழந்துஉயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.''

"
ஒருவரின் மூச்சு - சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?''

"
ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன.
மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது.
பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன
நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.''

"உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?''

"
உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர்நன்றாக குளிர்ந்த,பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்திஅந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள்.
கலப்படமில்லாதசுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத்திரத்திலோஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது.
அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும்குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறைத்தும் போகக்கூடாது.
இதற்கென்று சில ரசாயன கலவைகம் உள்ளன. அவை ``வயாஸ்பான் திரவம்'', ``ïரோ கால்லின்ஸ்'' திரவம், ``கஸ்டோயியல்'' திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன.
சிறுநீரகம்இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விடமிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.''

"
முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?''

"
நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக``அலெக்ஸில்'' கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.''

1905 
ஆம் வருடம் டிசம்பர் மாதம்டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.

1918 
ஆம் ஆண்டுமுதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.

1954 
ஆம் ஆண்டுதான்அமெரிக்காவின் ``பாஸ்டன்'' நகரில் டாக்டர். ஜான் முர்ரே,முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.

1954 
ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவமனையில்ரிச்சர்ட்ரோனால்ட் என்ற இரட்டையரில்ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.

1960 
ஆம் ஆண்டு - ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.

1963 ஆம் ஆண்டு ``கொலராடோ'' விலும்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

1965 
ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள்.

1967 
ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதிதென் ஆப்பிரிக்காவின் ``கேப்டவுன்'' நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். ``டென்னிஸ் டார்வெல்'' என்பவரின் இதயத்தை ``லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி'' என்பவருக்கு பொருத்தினார்.

1968 
ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

1983 
ஆம் ஆண்டு ``சர். மாக்டியா கூப்'' என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில்நுரையீரலையும்இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்.

1986 
ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

1994 
ஆம் ஆண்டு முதன் முதலாகஉயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார்.

2001 
ஆம் ஆண்டுஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன்இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.

2005 
ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.
***
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?
சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
கல்லீரல் - 18 மணி நேரம் வரை
இதயம் - மணி நேரம் வரை
இதயம்/ நுரையீரல் - மணி நேரம் வரை
கணையம் - 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கம் வரை
எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
தோல் - வருடம்அதற்கு மேலும்
எலும்பு - வருடம்அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள் - வருடம்அதற்கு மேலும்
பொதுவாகபாதுகாத்து வைத்துஉபயோகப்படுத்தலாம்.

No comments:

Post a Comment