Tuesday 8 May 2012

காயப்படுத்த வேண்டாமே?


காயப்படுத்த வேண்டாமே? - Others


என் நாவை 
அருத்துவிடுங்கள் 
மனசை காயப்படுத்தும் 
மதி கெட்டவர்களின் 
கேள்விகளுக்கெல்லாம் 
பதில் சொல்ல வேண்டாமே? 

என் செவிகளை 
அடைத்துவிடுங்கள் 
நிதானத்தை கெடுக்கும் 
நயவஞ்சக நரிகளின் 
ஊளைச்சத்தம் கேட்க்காதே? 

என் கண்களை 
பறித்து விடுங்கள் 
அயோக்கியதனங்களைக்கண்டு 
நித்திரையின்றி தவிக்கும் 
நிலை வராது அல்லவா? 

என் கால்களை 
ஓடித்துவிடுங்கள் 
கால்களை வாருவதும் 
காட்டிக்கொடுப்பதுமான 
எட்டப்பர்கள் மத்தியில் 
போட்டிபோட வேண்டாமே? 

அப்படியே .... 
என் கைகளை 
முறித்து விடுங்கள் 
எழுதுகோலை எடுத்து 
எதையாவது கிறுக்கி 
கவிதையென்று சொல்லி 
எல்லோரையும் 
காயப்படுத்த வேண்டாமே? 

([224 ] அனைத்து[முகம் மறைத்த] எழுத்துலக் கவிகளுக்கும்.. என்ற அய்யா காளியப்பன் எசகியல் அவர்களின் பதிவுக்காக எழுதப்பட்டது)

No comments:

Post a Comment