Friday 20 April 2012

காதல் தோல்வி: இளைஞர் தற்கொலை முயற்சி

 மானாமதுரை, மார்ச் 12: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த இளைஞர் விஷம் குடித்துவிட்டு தன்னை காப்பாற்றுமாறு 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார்.
 ராமேசுவரம் அருகேயுள்ள அரியாங்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலராஜன் மகன் ரோலன் வால்டன்(25). இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
 இந் நிலையில் மானாமதுரை வந்த இவர், புது பஸ்நிலையம் அருகே விஷம் குடித்தார். இதன் பின் செல்போனில் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து, என்னைக் காப்பாற்றுங்கள் எனக் கூறியுள்ளார்.
 இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்சில் இருந்த மருத்துவ முதலுதவி ஊழியர்கள், ரோலன் வால்டனை ஆம்புலன்ஸ் மூலம் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
 சிவகங்கையைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததாகவும், காதல் தோல்வியடைந்து விட்டதால் விஷம் குடித்ததாகவும் அவர் போலீஸôரிடம் தெரிவித்தார். இச் சம்பவம் குறித்து மானாமதுரை போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment