Sunday 1 April 2012

கறிவேப்பிலை சாதம்

உடலுக்கு உறுதியளிக்கும் கறிவேப்பிலை சாதம் 

தேவையான பொருட்கள் :


சாதம் - 2 கோப்பை
கறிவேப்பிலை - ஒரு கோப்பை
நல்லெண்ணை - 1 மேஜைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
வர மிளகாய் - 3
பெருங்காயம் - 1 சிட்டிகை
முந்திரி - 5
எலுமிச்சை - 1/4 பழம்
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை :

1. சிறிதளவு நெய்யில் கறிவேப்பிலையை மொறுவலாக வறுத்து, மைய பொடித்துக் கொள்ளவும்.

2. பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. அரிசியை சாதமாக வடித்து உதிரி உதிரியாக ஒரு அகன்ற பாத்திரத்தில் வைக்கவும்.

4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு
வெடித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும், வர
மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.

5. பிறகு நறுக்கிய வெங்காயம் பெருங்காயத்தூள் சேர்த்து சிவக்க வதக்கவும்.

6. பிறகு பொடித்த கறிவேப்பிலையைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.

7. அதனுடன் எலுமிச்சம்பழத்தை பிழிந்து சேர்க்கவும். 

8. பின்னர் அதனுடன் மிளகுத்தூள், நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவும்.

9. பிறகு ஆற வைத்த உதிரியாக உள்ள சாதத்தைச் சேர்த்து சாதம் குழையாமல் நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்பு :

1. இதில் சிறிது இஞ்சி துருவலைச் சேர்த்து வதக்கினால் இன்னும் வாசனையாக இருக்கும்.

2. முந்திரிக்குப் பதிலாக, வறுத்த நிலக்கடலை, வறுத்த பொட்டுக்கடலை போன்றவையும் சேர்க்கலாம்.  

No comments:

Post a Comment