Sunday 1 April 2012

பால்கோவா கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்: 

பச்சரிசி-200 கிராம்
சர்க்கரை சேர்த்த பால்கோவா-50கிராம்
துருவிய தேங்காய்-1 முடி
அவல்-1 டேபிள் ஸ்பூன்
நெய்-1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்-2 பொடி செய்தது
உப்பு-1 சிட்டிகை

செய்முறை:

* அவலை பாலில் ஊற வைக்கவும். தேங்காய்த் துருவலை நெய்யில் வதக்கிக் கொள்ளவும்.

* பச்சரிசியை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் அரை டம்ளர் தண்ணீரை ஊற்றி சூடாக்கி நெய்யும், உப்பும் சேர்த்து மாவைக் கொட்டிக் கிளறி இளந்தீயில் வதக்கிக் கொள்ளவும். 

* மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும் அதை அடுப்பிலிருந்து இறக்கி சிறு சிறு உருண்டைகளாக்கவும்.

* பாலில் ஊறிய அவல், பால்கோவா, தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் கலந்து பூரணம் செய்து கொள்ளவும். 

* இப்போது மாவு உருண்டைகளை பூரிக்கு இடுவது போல உருட்டி, அதன் நடுவில் தயாராக இருக்கும் பால்கோவா பூரணத்தை வைத்து மூடிக் கொள்ளவும். 

* இப்படி பிடித்தக் கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் அடுக்கி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

* பால்கோவா சுவையுடன் இந்தக் கொழுக்கட்டையின் சுவை அபாரமாக இனிக்கும்.

No comments:

Post a Comment