Wednesday 28 March 2012

ஆயில்யம், மகம், பூரம், உத்திரம்



ஆயில்யம்

(12 இலக்கின பொதுப் பலன்கள்)


 நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள் பணக்காரராக இருப்பீர்கள் அதனால் உங்கள் குடும்பத்துக்கு, பெரிய அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள் ஆனால், நீங்கள் பணத்தை விரயம் செய்வீர்கள். உங்கள் தந்தை, தாய் அல்லது உங்கள் வயதுடைய மற்றவர்களுக்கு, நீங்கள் தீங்கு விளைவிப்பவராக மாறக்கூடும். நீங்கள், ஒரு குறிக்கோளே இல்லாமல், இங்குமங்கும் திரிபவர் பாவகாரியங்களைச் செய்பவர் நன்றிகெட்டவர் சுயநலவாதி. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு மோசமான உறவுகள் இருந்துவரும். சந்தேகத்துக்குரிய கள்ள நடவடிக்கைகளிலும், பயனற்ற முயற்சிகளிலும், நீங்கள், உங்கள் ஆற்றலை செலவிடுவதுடன், மற்றவர்களை ஏமாற்றமும் செய்வீர்கள். மதுபானம் அருந்துவதிலும் சாப்பாடு சாப்பிடுவதிலும் பேரவா கொண்ட உங்களுக்கு, பெரிய குடும்பம் இருக்கும். உங்களுக்கு பலவீனமான கல்லீரல் இருக்கும் 33 வயதுக்குப் பின்னர், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்





மகம்

(12 இலக்கின பொதுப் பலன்கள்)



 நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், நல்ல செல்வந்தராகவும், புத்திசாலியாகவும், பிறரிடம் கருணை காட்டி உதவி செய்பவராகவும் இருப்பீர்கள். நீங்கள் வியாபாரத்தில் வெற்றி காண்பதுடன், சுகபோகமான வாழ்க்கையொன்றும் நடத்துவீர்கள். உங்களுக்கு பல பணியாட்கள் இருப்பார்கள் மதகாரியங்களில் உங்களுக்கு ஈடுபாடு இருக்கும். உங்கள் மனைவியுடன் சுமுகமான உறவுகளை கொண்டிருப்பீர்கள். உங்கள் பெற்றோர்களிடம், கடமைப் பற்றுடன் நடந்து கொண்டாலும், எதிலும் கண்டிப்பாக இருக்கக்கூடிய, ஒரு கடும் சுபாவம், உங்களிடம் குடிகொண்டிருக்கும். உங்கள் எண்ணமும் செயலும், தெளிவானதாய், திட்டவட்டமானதாக அமைந்திருக்கும். உங்கள் கல்லீரல் பலவீனமடைந்ததாய் இருக்கும். குந்த் முல நகூஷத்திரத்தில் நீங்கள் பிறந்திருப்பதால், பூஜைகள் செய்யவேண்டும் 25 வயதுக்குப் பின்னர், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.



பூரம்

(12 இலக்கின பொதுப் பலன்கள்)




நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்திருப்பதால், மென்மையாக பேசும் குணம் உடையவராகவும், சமயப்பற்றும், துணிச்சலும், தாராள சிந்தையும், பகைவர்களை வெற்றி கொள்ளும் சாதுர்யமும், தந்திரபுத்தியும் கொண்டவராக இருப்பீர்கள். நீங்கள், காமவெறி உணர்ச்சியும், கர்வமும் கொண்டிருப்பீர்கள். நிதிநிலை, அவ்வளவு வசதியாக இராது 33 லிருந்து 38 வயது வரையான காலம், உங்களுக்கு அதிருஷ்டமானதாக இருக்கும்.



உத்திரம்

(12 இலக்கின பொதுப் பலன்கள்)



நீங்கள் இந்த நகூஷத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்கள், கருணை உள்ளம் நிறைந்தவராகவும், பொறுமை மிக்கவராகவும், நல்ல பண்பாடான நடத்தை கொண்டவராகவும், பலராலும் விரும்பி நேசிக்கப்படுபவராகவும் விளங்குவீர்கள். நீங்கள், உங்கள் சொந்த சம்பாதிப்புடன், சுகபோகமாக வாழ்க்கை நடத்துவீர்கள். உங்கள் உடல் எடை அதிகரித்திடலாம் 28 லிருந்து 31 வயது வரையான காலத்தில், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.

No comments:

Post a Comment